முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தீவிரவாதி எம்.பி. ஆனார்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப்.12 - பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கத் தலைவர் அகமது லுதியான்ஸி என்பவர்   எம்.பி. ஆனார். இதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.

பாகிஸ்தானில்  தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருப்பவர் அகமது லுதியான்ஸி. கடந்த மே மாதம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள  ஜாங் தொகுதியில்  பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ல் இந்த  தேர்தலில் அகமது லுதியான்ஸி  எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறவில்லை. அவருக்கு 2-வது இடம் கிடைத்தது. இந்த நிலையில் முதல் இடத்தைப் பிடித்தவர்  தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  ஆனால் அவர் வாக்குப்பதிவில் தில்லு முல்லு செய்ததாகவும், முறைகேடு செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2-வது இடம்பெற்ற அகமது லுதியான்ஸி எம்.பி. ஆனதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்