முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முதல்வர் கிரண்குமார் அமைச்சர்களுடன் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூன்.3 - ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று தனது அமைச்சரவை சகாக்கள் சிலருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி தொடர்பாகவும், அரசு பணிகள் தொடர்பாகவும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஆந்திர மேல்சபை தலைவர் தேர்வு மற்றும் சபாநாயகர் தேர்வு குறித்து இந்த கூட்டத்தில் முதல்வர் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக உயரதிகாரிகள் ஐதராபாத்தில் தெரிவித்தனர். 

கிரண்குமார் ரெட்டி முதல்வரான பிறகு இன்னமும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அந்த பணி நிலுவையிலேயே உள்ளது. இதைத் தொடர்ந்தே நேற்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது குறித்தும் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்