முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்கு நுழையும்: டோனி

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable


அபுதாபி, ஏப்.18 - ஐபிஎல் கோப்பையை 2 முறை வென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். 2010,11-ஆம் ஆண்டுகளில் டோனி தலைமையில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
3 முறை இறுதிப்போட்டியில் தோற்றது. அணைத்து ஐப்எல் போட்டியிலும் அரை இறுதியில் நுழைந்திருந்தது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தொடக்க ஆட்டத்தில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று சந்திக்கிறது. மாலை 4 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. வெற்றியுடன் சென்னை அணில கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபிஎல் போட்டி குறித்து சென்னை அணியின் கேப்டன் கூறியதாவது: இங்குள்ள தட்பவெப்ப நிலையை ஏற்ப விளையாடுவது என்பது சவாலானதே என்றாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரே மாதிரி நிலைத்தன்மையுடன் விளையாடுவது முக்கியமானது. அரை இறுதிக்கு நுழைவது எங்களது முதல் இலக்காகும். அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்று நம்பிக்கை உள்ளது. நாக்அவுட் சுற்று மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்