முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னையை விழ்த்தியது பஞ்சாப்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

அபுதாபி, ஏப்.19 - சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. ஆட்டநாயகனாக மேக்ஸ்வெல் தேர்ந்தெடுக்கப்பட்டார் 

206 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக புஜாரா மற்றும் சேவாக் களமிறங்கினர். 19 ரன்கள் எடுத்த சேவாக் நெஹ்ராவின் பந்தில் ஆட்டமிழக்க, புஜாராவும், அடுத்து ஆட வந்த படேலும் முறையே 13 மற்றும் 2 ரன்களுக்கு வீழ்ந்தனர். 

தொடர்ந்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் இணை சென்னையின் பந்துவீச்சை விளாச ஆரம்பித்தனர். குறிப்பாக மேக்ஸ்வேல் எந்த சிரமுமின்றி மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பந்தை விரட்டினார். 43 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்த மேக்ஸ்வெல், ஸ்மித் பந்தில் ஆட்டமிழந்தாலும், அந்தக் கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றிக்கு அருகில் இருந்தது. 

31 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த மில்லர், அதிரடியைத் தொடர்ந்தார். முடிவாக 18.5 ஓவர்களிலேயே பஞ்சாப் வெற்றி இலக்கை அடைந்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. 

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்கள் மெக்கல்லம் மற்றும் ஸ்மித் இருவரும் அணிக்கு அதிரடி துவக்கத்தைத் தந்தனர். இவர்களின் ஆட்டத்தால் சென்னை 10 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது. 

மெக்கல்லம் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து வந்த ரெய்னா சிறப்பாக ஆடினார். 66 ரன்கள் குவித்த ஸ்மித் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் தோனி கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் சென்னை 205 ரன்கள் குவித்தத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்