முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் ஒலிம்பிக் போட்டி வைத்தால் சோனியாவுக்கு பதக்கம்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

அகமதாபாத், ஏப்.26 - ஊழல் செய்வதில் ஒலிம்பிக் போட்டி நடத்தினால் மகன் மன்மோகன்  சிங், சோனியா , ராகுலுக்கு தங்க பதக்கம் கிடைக்கும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் பாஜ தலைவர் நிதின் கட்கரி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. அவர் வருவார், வருவார் என உள்ளூர் கட்சி பிரமுகர்கள் காத்திருந்து வெறுத்து போய்விட்டனர். இரவு 10 மணி ஆகியும் கட்கரி வரவில்லை. இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய கூடாது என்பதால் வேறுவழியின்றி கூட்டத்தை ரத்து செய்தனர். முன்னதாக சூரத் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்கரி அதை முடித்துக் கொண்டு அகமதாபாத் திரும்ப தாமதம் ஏற்பட்டதாக பாஜ தலைவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் 9 தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், பொய் பேசுவதில் ஒலிம்பிக் போட்டி வைத்தால் மோடி தான் பதக்கம் வெல்வார் என்று கிண்டல் அடித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூரத் நகரில் பிரசார கூட்டத்தில் நிதின் கட்கரி பேசுகையில், ஊழல் செய்வதில் ஒலிம்பிக் போட்டி நடத்தினால், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்குதான் தங்க பதக்கம் கிடைக்கும். 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மட்டும் மொத்தமாக ரூ.4.89 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல கொள்ளைக் கார கட்சி என்று கடுமையாக தாக்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்