முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயிதே மில்லத் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை செலுத்துக்கிறார்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.4 - காயிதே மில்லத் 116-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 116-வது பிறந்த நாள் விழா காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் 5.6.2011 ​ ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறுகிறது.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, 5.6.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு, சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர்

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்.  

இந்த நிகழ்ச்சியில், தலைமை நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி,  அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்  பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்