முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ச்சுகல் ஓபன்: 3 மாதங்களுக்குப் பிறகு சோம்தேவ் வெற்றி

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

உய்ராஸ், மே 1 - இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். 

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ இப்டென்னை அவர் வென்றார். கடந்த 3 மாதங்களில் ஒற்றையர் பிரிவில் 5 போட்டிகளில் விளையாடிய சோம்தேவ் அனைத்திலும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். 

இந்நிலையில் போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மேத்யூ இப்டென்னை சோம்தேவ் வென்றார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சோம்தேவ் 102-வது இடத்திலும், மேத்யூ 64-வது இடத்திலும் உள்ளனர். 2-வது சுற்றில் செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சோம்தேவ் எதிர்கொள்கிறார். தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பெர்டிச் சோம்தேவுக்கு கடும் சவாலாக இருப்பார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்