எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அபுதாபி, மே 1 - கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இரு அணிகளின் 20 ஓவர்கள் ஸ்கோர் சமனில் முடிய, சூப்பர் ஓவர் ஸ்கோரும் சமனில் முடிந்தது. கொல்கத்தா அணியை விட ராஜஸ்தான் அணி அதிக பவுண்டரிகள் அடித்திருந்ததால், விதிகளின் படி ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் வாட்சன், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர் ரஹானே தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க ஆரம்பித்தார். மறுமுனையில் இருந்த நாயர் வினய் குமார் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சி செய்து 1 ரன்னுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த சாம்சன் அதிரடி ஆட்டத்துடன் கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். முன்னணிப் பந்துவீச்சாளர் மார்னே மார்கல் வீசிய 6-வது ஓவரில் சாம்சன் 4 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் அவரது அதிரடி ஷகிப் அல் ஹசன் வீசிய 9-வது ஓவரில் முடிவுக்கு வந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த வாட்சன், ரஹானே ஜோடி அணியை சிறப்பான ஸ்கோரை நோக்கி வழிநடத்தியது.
ரஹானே 44 பந்துகளில் அரை சதம் எடுத்தார். சிறப்பாக ஆடிவந்த வாட்சன் துரதிர்ஷடவசமாக 33 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த பின்னி முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஸ்மித், ரஹானேவுடன் இணைந்தார். ரஹானே கடைசி ஓவரில் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
வெற்றிக்கு 151 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, துவக்க வீரர்களாக பிஸ்லா மற்றும் காம்பீர் களமிறங்கினர். சென்ற போட்டிகளில் மோசமாக ஆடிய காம்பீர், இன்று கவனமாக ஆடினார். 3-வது ஓவரில் பிஸ்லா வீழ, காலிஸ் களமிறங்கினார். இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. காலிஸ் 13 ரன்களுக்கு டாம்பேவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த பாண்டே, 19 ரன்களில் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே காம்பீரும் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா அணியின் வெற்றிவாய்ப்பு மெலிந்தது. இந்த கட்டத்தில் ஜோடி சேர்ந்து ஆடிய யாதவ் மற்றூம் ஷகிப் அல் ஹசன் இருவரும் சூழலுக்கு ஏற்ப தங்களது ஆட்டத்தின் தன்மையை மாற்றினர். குறிப்பாக 17 மற்றும் 18-வது ஓவர்களில், இந்த இணை 26 ரன்களைச் சேர்த்தது. 19-வது ஓவரை வீச வந்த ஃபால்க்னர் யாதவ்வை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே ஓவரில் மேலும் உத்தப்பா மற்றும் வினய் குமார் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிச்சர்ட்சனின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷகிப். அடுத்த பந்தில் 2-வது ரன் எடுக்க முற்படும்போது பியூஷ் சாவ்லா ரன் அவுட் ஆனார். அடுத்த 4 பந்துகளில், ஒரு வைட் உட்பட 6 ரன்கள் மட்டுமே வர, ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவருக்குச் சென்றது. அணியை வெற்றியின் விளிம்பிற்கு எடுத்துச் சென்ற ஷகிப் அஉல் ஹசன் 18 பந்துகளில் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கொல்கத்தா, முதல் பந்திலேயே யாதவ்வை இழந்தது. 4-வது பந்தில் பாண்டே அதிரடியாக ஒரு சிக்ஸர் அடிக்க கடைசிப் பந்தில் ஷகிப் அல் ஹசன் ரன் அவுட் ஆனார். ஒரு ஓவரில் கொல்கத்தா 11 ரன்களை எடுத்தது.
ஒரு ஓவரில் 12 ரன்கள் தேவை என்று ஆட வந்த ராஜஸ்தான் அணிக்கு சவாலாக, கொல்கத்தாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச வந்தார். முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே வர, 4-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட ஸ்மித் 2 ரன்கள் மட்டுமே அடித்ததால் மீண்டும் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால், விதிகளின் படி, ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை விட அதிக பவுண்டரிகள் அடித்திருந்தால், அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.