முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் நிலக்கரி சுரங்த்தில் வெடி விபத்து: 20 பேர் பலி

வியாழக்கிழமை, 1 மே 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், மே 2 - ஆப்கானிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் ஏர்பட்ட வெடி விபத்தில், அங்கு வேலை பார்த்து வந்த 20 பேர் பலியானார்கள்.  மேலும் சுரங்கத்துக்குள் சிக்கி தவிக்கும் 25 பேரை மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள சமாங்கானில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் இரவு பகலாக நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சமாங்கானில் தஹான் இ தோர் என்ற இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த 20 தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். மேலும் 25 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

சுரங்க பணிக்காக வைத்திருந்த கெமிக்கல்கள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து சுரங்கத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார், அவரை போலீசார் தேடி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்