முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015-ஆண்டு உலக கோப்பைவரை மிஸ்பா உல் ஹக் கேப்டன்

வியாழக்கிழமை, 1 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, மே 2 -  2015ல் நடைபெறப் போகும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின்போது பாகிஸ்தான் அணிக்குக் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி அறிவித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடருக்கு பாகிஸ்தான் கேப்டன் யார் என்ற குழப்பம் தீர்ந்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு வேறு கேப்டன் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மொயின் கானும் கூட அப்படியேதான் பேசி வந்தார். ஆனால் மிஸ்பாவே கேப்டனாக நீடிப்பார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்