முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி துபாயில் கைது!

சனிக்கிழமை, 3 மே 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே 4 - இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி துபாயில் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டான். 

இந்தியாவில் குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவன் பைஜான் அகமது சுல்தான். அந்த இயக்கத்தின் முக்கிய அமைப்பாளராக செயல்பட்டு வந்தான். இவன் மேற்கு ஆசிய நாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு தீவிரவாத செயல்களுக்கு ஆட்களை திரட்டி வந்தான். 

இவன் ஐக்கிய அரபு நாடுகளில் தலைமறைவாக இருக்கும் தகவலை கடந்த ஆண்டு இந்திய நேபாள எல்லையில் பிடிபட்ட இந்தியன் முஜாகிதீன் கமாண்டர் முகமது அகமது ஜரார் சித்திபாபா என்பவன் தேசிய புலனாய்வு பிரிவிடம் தெரிவித்து இருந்தான். இதையடுத்து இந்திய உளவு பிரிவு அதிகாரிகள் துபாயில் கண்காணித்து வந்தனர். அந்த நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அகமது சுல்தான் துபாயில் பிடிபட்டான். நேற்று முன்தினம் அவன் டெல்லி கொண்டு வரப்பட்டான். உடனடியாக அவனை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான முகமது அடிப் அமீன் இறந்த பிறகு அவனது பணியை அகமது சுல்தான் கவனித்து வந்தான். இயக்கத்துக்காக கராச்சி, துபாய் போன்ற இடங்களில் நிதி திரட்டி வந்தான். கடந்த பிப்ரவரி மாதம் பைஜான் என்ற தீவிரவாதி துபாயில் கைது செய்யப்பட்டான். அரபு நாடுகளில் தீவிரவாதிகள் பதுங்கி இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களை பிடிக்க ஐக்கிய அரபு எமிரேட் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை இந்தியா நாடியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்