முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ல் கொழும்பில் இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2014      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு, மே 5 - வரும் 12ம் தேதி கொழும்பில் இந்தியா, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா, இலங்கை மீனவர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. 

அதற்கு பிறகு மார்ச் மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை 2 முறை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியா, இலங்கை மீனவர்களிடையே கொழும்பு நகரில் வரும் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனை இலங்கை மீன்வள துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தும் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்