முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையா? சச்சின் பதில்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஜூன்.5 - கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் இன்னும் மன நிறைவடையவில்லை. மன நிறைவு அடைந்து விட்டதாக தோன்றும் போது விளையாட்டில் தேக்க நிலை ஏற்பட்டு விடும். வெற்றி பெற்றாலோ, சதம் அடித்தாலோ, மகிழ்ச்சியடையலாம். ஆனால் மன நிறைவு அடைய முடியாது. மன நிறைவு அடைந்து விட்டதாக கருதும் போது இயல்பாகவே நம்முடைய ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டு விடும். 

20 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் ஓய்வு குறித்து நினைத்ததில்லை. இப்போதும் மிக அதிகமாக கிரிக்கெட்டை நேசிக்கிறேன். அதுதான் எனது வேலை. கிரிக்கெட் இன்னும் என்னுடைய இதயத்தில் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. இப்போதும் அதே கனவுதான் உள்ளது. அதை நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது. உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற போது நான் களத்தில் இல்லை. 

எனது தனிப்பட்ட சாதனை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அதிக ரன்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. உலகக் கோப்பையில் வெற்றி பெற வேண்டும். உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தை கழுத்தில் அணிய வேண்டும். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இப்போது நிறைவேறி விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்