எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மே 8 - மும்பைக்கு இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முன்னதாக, தனது 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டாஸில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் 3 ஓவர்களிலேயே துவக்க வீரர்கள் டங் மற்றும் கவுதம் 25 ரன்களைக் குவித்தனர். டங் 15 ரன்களுக்கு பட்டேலின் பந்தில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஆட வந்த ராயுடு 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த கவுதம் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் கோரே ஆண்டர்சன் ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்த சில பந்துகளிலேயே பெவிலியன் திரும்பினார். 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்ட் ஜோடி சேர்ந்தனர். பெங்களூரு பந்துவீச்சை சமாளித்து ஆடிய இந்த இணை, ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை.
வருண் ஆரோன் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா 31 பந்துகளில் அரை சதத்தையும் கடந்தார். கடைசி ஓவரில் 43 ரன்களுக்கு (31 பந்துகள்) பொல்லார்ட் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எட்டியது.
188 என்ற கடினமான இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணி, கிறிஸ் கெயிலின் விளாசலில் புத்துணர்ச்சியுடன் இலக்கை விரட்டியது. குறிப்பாக 3-வது ஓவரில், கெயில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளோடு 28 ரன்களைச் சேர்த்தார். மற்றொரு துவக்க வீரர் பட்டேல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், கெயில் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங்கின் பந்தில் கெயில் ஆட்டமிழந்து பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் வேகமாக ரன் சேர்க்க முற்பட்டு, வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் மும்பையின் வசம் வந்தது. கோலி 35, ரோஸ்ஸோ 24, டி வில்லியர்ஸ் 9, யுவராஜ் சிங் 6 என தொடர்ந்து ஆட்டமிழந்தனர். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பும்ரா, ஹர்பஹன் மற்றும் மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மும்பை அணி ஆடும்போது, 17-வது ஓவரை வீசிய ஸ்டார்க், பொல்லார்டுடன் சண்டையில் ஈடுபட்டார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்டார்க் பவுன்சர் வீச, பொல்லார்ட் அதை அடிக்க முயற்சி செய்து தவறவிட்டார். இதைத் தொடர்ந்து ஸ்டார்க் பேசிய வார்த்தைகளை பொல்லார்ட் கண்டுகொள்ளாமல் இருந்தார்.
4-வது பந்தை ஸ்டார்க் வீச வரும்போது பொல்லார்ட் நிறுத்துமாறு கையசைத்து நகர, ஸ்டார்க் நிறுத்தாமல் வேகமாக பொல்லார்டை நோக்கி பந்தை வீசினார். இதனால் ஆத்திரமடைந்த பொல்லார்ட் கையிலிருக்கும் பேட்டை ஸ்டார்க்கை பார்த்து வீசினார். சட்டென குறுக்கிட்ட நடுவர்கள், பெங்களூரு கேப்டன் கோலி, மேற்கிந்திய வீரர் கெயில் ஆகியோர் பொல்லார்டை சமாதனம் செய்தனர். ஸ்டார்க் மற்றும் பொல்லார்ட் இருவருக்கும் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன்கள் பேட்டி:
மும்பை அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்: மும்பை அணியின் சிறந்த ஆட்டம் இதுவாகும், நாங்கள் விளையாடிய ஆட்டத்தில் இது சிறப்பாக அமைந்தது. சில கேட்சகளை அபாரமாக பிடித்தோம். பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை நன்றாக வெளிப்படுத்தினர். எனது ஆட்டம் முக்கியத்துவம் பெற்று இருந்தது மகிழ்ச்சியை தருகிறது. இதே நிலை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். சென்னை அணிக்கு எதிராக ஆடும் அடுத்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
பங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி கூறுயபோது, எங்களது பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. மேலும் ஒரு சிறந்த பார்டனர்சிப் அமைந்து இருக்க வேண்டும். தொடக்கம் நன்றாக இருந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனி விளையாடக்கூடிய 7 ஆட்டங்களில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமானது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.