முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானை 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத்

வெள்ளிக்கிழமை, 9 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், மே 10 - 7-வது ஐபிஎல் 30-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் எதிர் கொண்டது.

முதலில் ஐதராபாத் அணி களமிறங்கியது, மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனாள் பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது ஐதராபாத். அதிகபட்சமாக கேப்டன் தவான் 33, பதான் அவுட் ஆகாமல் 21 ரன், ராகுல் 18 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் வாட்சன், பாட்டியா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

எளிதான இளக்கு என்று களமிறங்கிய ராஜஸ்தானுக்கு முதல் ஓவிரிலேயே அதிரிச்சி காத்திருந்தது. தொடக்க வீர்ர ரஹானேவை டக் அவுட் ஆக்கி புவனேஸ்வர் குமார் சரிவை தொடங்கி வைத்தார். மேலும் பவுலிங்கிற்கு சாதகமான பிட்சில் ஐதராபாத் பவுலர்கள் துல்லியமாக பந்து வீச, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்யமுடியவில்லை. குறிப்பாக புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் அனல் பறந்தது. மறுபுறம் சுழலிலி கரண் சர்மாவும், அமித் மிஸ்ரா ஆகியோரின் அபாரமாக பந்து வீசினர்.

ஐதராபாத் அணியின் அபாரமான பந்து வீச்சால் எளிதான இலக்கை ராஜஸ்தான் தவற விட்டது. ராஜஸ்தான் 19.5 ஓவரிலேயே 102 அனைத்து விக்கெடுகளையும் இழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 22, சாம்சன் 16 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர்குமார் 4 விக்கெட், ஸ்டேன் 2, சர்மா, ஹென்ரிக்ஸ், பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழத்தினர். 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய புவனேஸ்வர் குமார் மேன் ஆப் தி மேட்ச் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கேப்டன் தவான் கூறுகையில்: நாங்கள் அதிகபட்சமாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. இதனால் மிகவும் டைட்டாக் விளையாட வேண்டும் என்று வீரர்களிடம் கூறினேன். அதன்படியே, பவுலர்கள் அசத்தினர். பிட்ச்சும் பந்து வீச்சுக்கு நன்கு ஓத்துழைத்தது. புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது. மிஸ்ராவின் பந்துவீச்சும் அபாரமாக பந்து வீசினார், அதே நேரத்தில் கரண் சர்மாவின் செயல்பாடும் நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் கேப்டன் வாட்சன் கூறுகையில்: எங்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ஆனாள் பேட்டிங்கில் சோதப்பி விட்டோம். மைதானத்தின் தன்மை தெரியாமல் ஆடி விட்டோம். இந்த தோல்விக்கு நான் முழு போருப்பேற்கிறேன். ஐதராபாத் அணியில் மிக சிறந்த பவுலர்கள் உள்ளனர். அவர்களின் பந்து வீச்சு அபாராமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்ட நாயகன் புவனேஸ்வர்குமார் கூறுகையில்: 20-20 போட்டிகளுக்கு நான் புதுசு. ஐதராபாத் அணியில் இடம் பெற்றதன் மூலம் நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன். குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களி பன்துவீசும் சூட்சுமத்தை உணர்ந்துள்ளேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago