முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: 2 கவர்னர்களை விசாரிக்க முடிவு

திங்கட்கிழமை, 19 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே 20 - வி.ஐ.பி.க்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் பெற ரூ. 360 கோடி லஞ்சம் தரப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநில கவர்னர் எம்.கே. நாராயணன், கோவா கவர்னர் பி.வி. வான்சூ கியோரை சாட்சிகளாக விசாரிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் மத்திய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற பிரிட்டன் இத்தாலிய கூட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ. 360 கோடி லஞ்சம் தரப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது கவர்னர்களாக பதவி வகிக்கும் எம்.கே. நாராயணன் மற்றும் பி.வி. வான்சூ ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது. 

இதை தொடர்ந்து அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர்களிடம் குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இடமில்லை என்று கூறி சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்க சட்டத்துறை அப்போது மறுத்து விட்டது. இதனிடையே இந்த வழக்கில் எந்த அடிப்படையில் கவர்னர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டதாக தெரிவிக்குமாறு சி.பி.ஐ.யிடம் விளக்கம் கேட்டு சட்ட அமைச்சகத்தின் சார்பில் அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சட்ட அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. அனுப்பிய விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

ஹெலிகாப்டர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் பதவி வகித்தார். அதே போல் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை தலைவராக பி.வி. வான்சூ இருந்தார். ஒப்பந்தத்தை முடிவு செய்வது தொடர்பாக கடந்த 2005ல் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஹெலிகாப்டர்களின் திறன் குறித்து சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைப்பதற்கு சாதகமாக அமைந்தன. எனவே இந்த வழக்கு தொடர்பாக நாராயணன் மற்றும் வான்சூ ஆகியோரை சாட்சிகள் என்ற அடிப்படையில் மட்டுமே விசாரண செய்து அவரது வாக்குமூலங்களை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. யின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago