எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஜூன்.- 7 - தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுல் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன, சொர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று(ஜூன் 6 ம் தேதி) மிக சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு கோபுர தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரது திருவுருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள வேலுக்கே அனைத்து அபிஷேகங்களும் நடக்கிறது.
அங்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தவும், ரூ. 5 கோடியில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக பணிகள் துவக்கமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், வல்லப கணபதி, கோவர்த்தானம்பிகை விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. கோயிலுக்குள் உள்ள அனைத்து தூண்களிலும் உள்ள சுவாமிகளின் கற்சிலைகள், கற்சுவர்கள் அனைத்தும் வாட்டர் பிளாஸ்டர் முறையில் சுத்தம் செய்யப்பட்டு வார்னீஸ் அடிக்கப்பட்டது.
கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதி கமலம் வரையப்பட்டன. கம்பத்தடி மண்டபத்தில் சுழலும் லிங்கம், ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் நந்தி, லிங்கம், கலைநயத்துடன் புதுமையான முறையில் வரையப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் திருப்பணிகள் துவங்கும் வகையில் ஏப்ரல் 10 ம் தேதி பாலாலயம் நடந்தது. மூலவர்களின் திருவுருவங்கள் மரத்தினால் செய்யப்பட்டு சண்முகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
மூலஸ்தானம் மூடப்பட்டு சுவாமிகள் புதுப்பிக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் மாலை மூலவர்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு 8 ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஜூன் 2 ம் தேதி முதல் நடந்து வந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை 5 மணிக்கு பூர்த்தி செய்யப்பட்டன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி, பித்தளைக் குடங்களை சிவாச்சார்யார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க காலை 5.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு எடுத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து 5.45 மணிக்கு வல்லப கணபதி, கோவர்த்தானம்பிகை விமானங்களுக்கு புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சண்முக நாதன் பச்சைக் கொடி அசைத்து பூஜைகளை துவக்கி வைத்தார். அதன் பின்னர் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு சம காலத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. அனைத்து பூஜைகளும் முடிந்து ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் 7 சிவாச்சார்யார்கள், 2 விமானங்களுக்கு 2 சிவாச்சார்யார்கள் ஆகியோர் குடங்களில் இருந்த புனித நீரை காலை 6.45 மணிக்கு கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீப தூபாரதனைகளும் நடந்தன. காலை 7 மணிக்கு மூலவர்கள் மற்றும் கோவர்த்தானம்பிகைக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கும்பாபிஷேகத்தை காண அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவியத் தொடங்கினர். பாஸ் வழங்கப்பட்ட வி.ஐ.பிக்கள், பக்தர்களும் கோயில் மேல்தளத்தில் இருந்து கும்பாபிஷேம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ் கிடைக்கப் பெறாதவர்கள் கோயில் முன்பு உள்ள ரோடுகளில் அமர்ந்து தரிசனம் செய்தனர். எங்கு திரும்பினும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், போஸ், சாமி, தமிழரசன், சுந்தரராஜன், ராஜா, மாநகராட்சி அ.தி.மு..க. தலைவர் சாலைமுத்து, முன்னாள் எம்.பிக்கள் ராஜன் செல்லப்பா, ராம்பாபு, மாவட்ட கலெக்டர் சகாயம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தொகுதி பொறுப்பாளர் தர்மராஜ், நகர இணைச் செயலாளர் வசந்தி, 68 வது வட்ட முன்னாள் பிரதிநிதி அரிராமன், அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் கே. கருத்தக்கண்ணன், ஒன்றிய செயலாளர் இரா. சுப்பிரமணி, இந்து அறநிலையத் துறை கமிஷனர் கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
1. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் பச்சைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், சுந்தரராஜன், ராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாநகராட்சி அ.தி.மு.க. தலைவர் சாலைமுத்து உட்பட பலர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.