முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 9 - வருகிற ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதேபோல மத்திய அமைச்சர்களின் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரத்தையும்  தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், மத்திய அமைச்சர்கள் ஆண்டுதோறும் அவர்களது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில் எல்லா அமைச்சர்களும் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஜூன் 2 ம் தேதி அனைத்து அமைச்சர்களும் கடிதம் எழுதியுள்ளேன்.  இந்தக் கடிதத்தில் அமைச்சர்கள், அவர்களது மனைவிகள், மேலும் அவர்களை சார்ந்தவர்களின் சொத்து விபரங்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் அமைச்சரும், அவரது மனைவி, அவரைச் சார்ந்தவர்கள் வர்த்தகம் செய்கிறார்களா அல்லது வெளிநாட்டு அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலோ அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்களிலோ பணிபுரிகிறார்களா என்று தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்