முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் - சம்மி

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

டிரினிடாட், ஜூன். 10 - இந்தியாவுக்கு எதிரான 2 - வது போட்டியிலும் மே.இ.தீவு அணி தோ ல்வி அடைந்ததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரண ம் என்று அந்த அணியின் கேப்டனான டேரன் சம்மி தெரிவித்தார். 

மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி டிரினிடாட் தீவில் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவு அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்னை எடுத்தது. அந்த அணி சா ர் பில், சர்வான் 56 ரன்னையும், சிம்மன்ஸ் 53 ரன்னையும், சாமுவேல்ஸ் 36 ரன்னையும், எட்வர்ட்ஸ் 25 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான அமித் மிஸ் ரா 4 விக்கெட்டையும், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான முனாப் படேல் 3 விக்கெட்டையும் எடுத்தனர். தவிர, யூசுப் பதான் 2 விக்கெட் எடுத்தார்.  

பின்பு ஆடிய இந்திய அணிக்கு 183 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 33.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்னை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோக்லி 81 ரன்னையும், பார்த்திவ் படேல் 56 ரன்னையும் எடுத்தனர். கோக்லி ஆட்டநாயக னாக தேர்வு செய்யப்பட்டார். 

முன்னதாக டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்திலும் இந்தி யா வெற்றி பெற்றது. தற்போது 2 -வது ஆட்டத்திலும் வெற்றி பெற்றதால் இந்திய அணி இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது.  

இந்தப் போட்டி முடிந்த பிறகு போர்ட் ஆப் ஸ்பெயிந் நகரில் நிருபர் களைச் சந்தித்த மே.இ. தீவு அணியின் கேப்டன் சம்மி தோல்வி குறித் து தெரிவித்த கருத்து வருமாறு - 

இந்தப் போட்டியில் எங்களது அணியின் துவக்க வீரர்கள் நல்ல துவக் கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் இதனை சரியாக பய ன்படுத்திக் கொள்ள வில்லை. 

எங்களது பேட்ஸ்மேன்கள் முதலில் நன்கு ஆடினார்கள். ஆனால் யா ரும் நிலைத்து நின்று ஆடத் தவறி விட்டனர். 2 பேர் மட்டும் அரை சதம் அடித்தனர். இதில் யாராவது ஒருவர் நிலைத்து ஆடி நன்கு ரன்களைக் குவித்து இருக்க வேண்டும். 

எங்களது அணி 30 ரன் குறைவாக எடுத்தது. 3 - வது போட்டியில் நாங்  கள் சிறப்பாக ஆடுவோம். முதல் வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடினால் எங்களுக்கு வெற்றி நிச்சயம். 

மேலும், ஆட்டத்தின் பிற்பகுதியில் எங்களது பேட்ஸ்மேன்கள் பேக் புட்டிலேயே ஆடினார்கள். ஒரு புறம் விக்கெட்டுகள் சிறிது இடைவெ ளியில் விழுந்த வண்ணம் இருந்தன. சமாமுவேல்ஸ் மீண்டும் தனது பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறி னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்