முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணியின் அதிரடி தொடருமா?

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஆன்டிகுவா, ஜூன். - 11 - மே.இ.தீவுக்கு எதிரான 3 - வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரு அணிகளும் இன்று மீண்டும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.  இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே முதல் 2 ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இதில் இரண்டிலும் இந் திய வீரர்கள் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் 3 -வது ஒரு நாள் போட்டிக் கான அணியிலும் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இடம் பெறவில் லை. ஆல்ரவுண்டர் பிராவோ மற்றும் பந்து வீச்சாளர் ராம்பால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் மேற்கு இந்திய த் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலை மையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போ  ட்டி நடத்த திட்டமிடப்பட்டது. 

இதில் முதலில் டி - 20 போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2 ஒரு நாள் போட்டி நடந்தது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிக்காக மே. இ.தீவு அணி முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது 3 - வது  போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் 2 போட்டிக்கான அணியில் கெய்ல் இடம் பெறவில்லை. எனவே இந்த அணியில் அதிரடி துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

மே.இ.தீவு அணி வீரர்கள் தேர்வின் போது, கெய்ல் ஐ.பி.எல். போட்டியில் ஆடிக் கொண்டு இருந்தார். தவிர, இடையே தேர்வுக் குழுவினர் குறித்து ரேடியோவில் அவர் விமர்சனம் செய்தார். இதனால் அவரை தேர்வுக் குழுவினர் புறக்கணித்ததாக தெரிய வருகிறது. 

இந்திய அணிக்கு எதிரான 3 -வது போட்டியில் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ மற்றும் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ராம்பால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

3 -வது போட்டியில் ஓய்வு வேண்டும் என்று பிராவோ கேட்டுக் கொ  ண்டதன் பேரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போட்டியில் பங்கு கொண்டதால் ராம்பால் ஓய்வு கேட்டார். அவருக் கும் இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

டிவைன் பிராவோ கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்கு 3 -வது போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது என்று மே.இ.தீவு கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தவிர, அதிகமான வேலைப் பளு காரணமாக ராம்பாலுக்கு இந்தியா மற்றும் மே.இ.தீவுக்கு எதிராக ஆன்டிகுவாவில் நடக்க இருக்கும் 3 -வ து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி, கேப்டன் ரெய்னா, ரோகித் சர்மா மற்றும் பத்ரிநாத் ஆகியோர் நன்கு ஆடி வருகின்றனர். எனவே இந்தப் போட்டியிலும் அவர்கள் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்