முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது: பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 13 - இலங்கைக்கு சிவசங்கரமேனன் பயணம் வெறும் கண்துடைப்பு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவே கிடைக்காது என்று பா.ஜ.க. தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையிலான இந்திய குழுவினர் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு என்று தமிழக பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

2009ல் இலங்கை தமிழர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்டபோதும், அறிவிக்கப்படாத யுத்தம் நடத்தியபோதும் இலங்கை அரசுக்கு துணையாக இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தான்.  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஏறக்குயை கட்சி பிரதிநிதிபோல் இலங்கை சென்று செயல்பட்டவர் சிவசங்கரமேனன். அவர் சென்ற பிறகுதான் வெளியே தெரியாமல் இலங்கை அரசு தமிழர்களை கொன்று குவித்தது.

அப்படிப்பட்ட சிவசங்கரமேனனை இலங்கைக்கு அனுப்பியிருப்பதால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.  தற்போது இருக்கும் காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

தமிழக சட்டமன்றத்தில் எவ்வளவுதான் தீர்மானங்கள் நிறைவேற்றினாலும், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக தீர்வு ஏற்படாது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்