எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்டிகுவா, ஜூன் - 13 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டுவெண்டி - 20, 5 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் உள்ளன. இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்று 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் உத்வேகத்துடன் இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்சும், எட்வர்ட்சும் களமிறங்கினர். துவக்கமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரிவாக அமைந்தது. இரண்டாவது ஓவரை வீசிய முனாப் பட்டேல் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் எட்வர்ட்சை அவுட்டாக்கினார். விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல், எட்வர்ட்ஸ் கொடுத்த கேட்சை அழகாக பிடித்து அவரை வெளியேற்றினார். தொடர்ந்து ராம்நரேஷ் சர்வான் களமிறங்கினார். இவரும் சிம்மன்சும் நிதானமாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தபோது 28 ரன்களை எடுத்திருந்த சர்வான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு துவங்கியது. இந்த சரிவை துவக்கிவைத்தவர் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா. அப்போது களமிறங்கிய சாமுவேல்ஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்து மிஸ்ராவின் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்தார் அறிமுக வீரர் ஹயாத். இவரும் மிஸ்ராவின் சுழலில் ஏமாந்து 1 ரன்னை மட்டும் எடுத்து கிளீன் போல்டானார். அடுத்ததாக அதிரடி வீரர் பொலார்டு களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிக்கொண்டிருந்த சிம்மன்சும் 45 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ராவின் பந்தில் விராட் கோஹ்லியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் பாவ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 85 ஐ எட்டியபோது ஹர்பஜன் சுழலில் பொலார்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். இந்நிலையில் கேப்டன் டேரன் சம்மி களமிறங்கினார். இவராலும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சம்மி 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 29.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. இந்நிலையில் ரஸ்ஸல் களமிறங்கினார். இவரும் பாவ்வும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட 15 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. குறிப்பாக ரஸ்ஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 174 க்கு உயர்ந்தபோது 36 ரன்களை எடுத்திருந்த பாவ், முனாப் பட்டேலின் பந்தில் தவானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக கீமா ரோச் களமிறங்கினார். இந்நிலையில் ரஸ்ஸலின் அதிரடி தொடர்ந்தது. ரஸ்ஸல் தான் சந்தித்த கடைசி 14 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியது. ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 92 ரன்களையும், ரோச் ஆட்டமிழக்காமல் 7 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் முனாப் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியில் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் அதிரடியாக துவக்கினார். ஆனால் தவான் துவக்கம் சரியாக இல்லை. அணியின் எண்ணிக்கை 26 ஐ எட்டியபோது தவான் கேப்டன் டேரன் சம்மியின் பந்தில் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் சாமுவேல்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து கடந்த போட்டியின் ஆட்டநாயகன் விராட் கோஹ்லி தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் அம்பயரின் தவறான தீர்ப்பினால் அவுட்டானார். இதனால் 26 ரன்களிலேயே இந்திய அணி 2 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து தமிழக வீரர் பத்ரிநாத் களமிறங்கினார். இவர் மிக நிதானமாகவே ஆடினார். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது 11 ரன்களை எடுத்திருந்த பத்ரிநாத் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 79 ஐ எட்டியபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த பார்த்தீவ் பட்டேல் 46 ரன்களில் பிஷுவின் சுழல் பந்தில் வீழ்ந்தார். ரஸ்ஸல் கேட்ச் பிடித்து பட்டேலை வெளியேற்றினார். தொடர்ந்து கேப்டன் ரெய்னா வந்தார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது 3 ரன்களை எடுத்திருந்த ரெய்னா, பொலார்டின் பந்தில் சிம்மன்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 21.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த யூசுப்பதான் ஒரு ரன் எடுத்த நிலையில் , பிஷுவின் சுழற்பந்தை சரியாக கணிக்காமல் தூக்கி அடித்தார். அந்த கஷ்டமான கேட்சை அற்புதமாக பிடித்தார் சிம்மன்ஸ். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தாலும் ரோஹித் சர்மா நிதானமாக நின்று ரன்களை சேர்த்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போலவே தடுமாறியது. இந்நிலையில் ஹர்பஜன்சிங், ரோஹித் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பொறுப்பை உணர்ந்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடியை பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தபோது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்பஜன் சிங் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரவீன் குமார் பேட்டிங் பவர் பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்தார். எதிர் முனையில் ரோஹித்தும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மாக ஆட்டமிழக்காமல் 86 ரன்களையும், குமார் ஆட்டமிழக்காமல் 25 ரன்களையும் எடுத்திருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டேரன் சம்மி, பிஷு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 64 பந்துகளில் 92 ரன்களைக் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி ஏப்ரல் 2008 க்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் நாட்டுக்கு எதிராகவும் தொடரை வெல்லவில்லை என்ற பரிதாப நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.