முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் வெள்ளம் 50 பேர் உயிரிழந்தனர்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,ஜூன்.- 13 - சீனாவில் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 1.27 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவுக்கு 300 மி.மீ. மழை பெய்ததால் இந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாயின. போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்செங் பகுதியே நீரில் மூழ்கியுள்ளது. ஹூனான் மாகாணத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஜியாங்ஸி மாகாணத்தில் மட்டும் 29 ஆயிரம் பேருக்கு மேல் இடம் பெயர்ந்துள்ளனர். குயிஷூ மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாகாணங்களும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்