முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியிலிருந்து ஜெயலலிதா சென்னை திரும்பினார்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.15 - தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்தோடு அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா இரண்டு நாள் பயணமாக, முதன் முறையாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன் செயலர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றிருந்தனர். டில்லியில் தேசிய கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசிய ஜெயலலிதா, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பின்னர் தனி விமானம் மூலம் மாலை 5.10  மணிக்கு சென்னை திரும்பிய ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பழனியப்பன், ஜி.செந்தமிழன், சுப்பிரமணியன், எஸ்.ஆர்.சிவாபதி, கோகுல இந்திரா, இசக்கி சுப்பையா, சின்னையா, எல்.ஏ.க்கள் கந்தன், தன்சிங், வைகை செல்வன் மற்றும் முன்னாள் ராஜகண்ணப்பன், கூடுதல் டி.ஜி.பி. சார்ஜ், சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் பெருந்திரளாக வந்திருந்து வரவேற்றனர். கெட்டும் மழை பெற்படுத்தாமல் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்