முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் வைகாசி திருத்தேரோட்டம்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, ஜூன்15 - பழனி முருகன் கோவில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. பழனி முருகன் கோவில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை சுமார் 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வைர நகைகள், பட்டாடைகள், தங்க கிரீடங்கள் மின்ன வீற்றிருந்தனர். திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து நிலைக்கு வந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம், பிரசாத ஸ்டால் ஹரிகரமுத்து, அ.தி.மு.க நகர செயலாளர் பரதன், கவுன்சிலர்கள் முருகானந்தம், சுரேஷ், தே.மு.தி.க. நகர செயலாளர் வெங்கட சுப்பிரமணி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, சங்கராலயம் முருகனட்மை பாலசுப்பிரமணியம், சிவகுமார், பெரிய நாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், தாராபுரம் பெரியசாமி, சிவகுருநாதன், பேஷ்கார்கள் கருப்பணன், ராமலிங்கம், வீரமணி, முருகேசன், மருதுசாமி, மின் வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்