முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா அணைகட்டுவதால் பயம் இல்லை: எஸ்.எம். கிருஷ்ணா

புதன்கிழமை, 15 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.15 - பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டுவதால் தற்போது பயப்படத்தேவையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இமயமலையில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள திபெத்தின் தென்மேற்கு பிரமபுத்திரா நதி உற்பத்தியாகி அசாம் மாநிலம் வழியாக ஓடி வங்கக்கடலை அடைகிறது. இதனால் இந்தியால் பல லட்சம் ஏக்கர் பாசன வசதி பெருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறது. இந்தநிலையில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா பல்வேறு அணைகளை கட்டி வருகிறது. அதனால் எதிர்காலத்தில் பிரமபுத்திரா நதியை சீனா தன் நாட்டு பக்கம் திருப்பிவிட வாய்ப்பு உள்ளது என்ற பிரச்சினை உருவாகி உள்ளது. 

இந்தநிலையில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணைகள் கட்டி வருவது குறித்து நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணா, பிரமபுத்திரா நதியில் சீனா அணைகள் கட்டுவதால் உடனடியாக பயம் எதுவும் இல்லை. மின்சார உற்பத்திக்காக இந்த அணைகள் கட்டப்படுகின்றன. அந்த அணைகளில் தண்ணீர் தேக்கப்படாது என்பது குறித்து தகவல் அறிந்துள்ளோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago