முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்காணூரணி தேவர் சிலைக்கு அமைச்சர் மரியாதை

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஜூன்.15 - திருமங்கலம் தொகுதி செக்காணூரணியில் உள்ள தெவரின் திருவுருவ சிலைக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் செக்காணூரணிக்கு வருகை தந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர் செக்காணூரணி பஸ்நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பில் உள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கொக்குளத்தில் உள்ள தனது குலதெய்வக் கோவிலான அருள்மிகு  ஆதிசிவன் கோவிலுக்கு அமைச்சர் சென்றார். கோவிலில் அவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பிறகு ஆதிசிவன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் சாமி கும்பிட்டார். பின்னர் வைகை அணையில் நடைபெறும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான முத்துராமலிங்கம், மாவட்ட துணைச்செயலாளர் அய்யப்பன், புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சாலைமுத்து, மாவட்ட பாசறை செயலாளர் கபிகாசிமாயன், மீனவரணி போத்திராஜா, தொகுதிசெயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் நிரஞ்சன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், சார்பு அணி நிர்வாகிகள் கேபிள் முரளி, நாகையாசாமி, சிவன்காளை, ஒன்றிய அவைத்தலைவர் சாத்தங்குடி தமிழழகன் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்