முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் சாரல் மழை - அருவிகளில் வெள்ளம்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஜூன். 15 - குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை விதித்தனர். மற்ற அருவிகளில் உல்லாச பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் சீசனை அனுபவிக்க தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் உல்லாசப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். 

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, குண்டர் தோப்பு அருவி, உட்பட பல்வேறு அருவிகள் உள்ளது. இந்த அருவிகளில் குளிப்பதற்கு மட்டுமல்லாமல், சீசன் காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடிப்பதும், லேசான வெயில் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டுவதும் குற்றாலத்தின் சிறப்பு அம்சமாகும். இதனை அனுபவிக்க உலகம் முழுவதும் உள்ள உல்லாச பயணிகள் குற்றாலத்திற்கு வருவது வாடிக்கை. 

இந்த ஆண்டு கடந்த சிலமாதங்களாக தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக இருந்தது. மேலும் 

கடந்த 1 மாதகாலமாக அனைத்து பகுதிகளிலும் கத்தரி வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் குற்றாலம் பகுதிகளில் மட்டும் கத்திரி வெயிலின் தாக்கம் மக்களுக்கு தெரியாத வகையில் நல்ல குளிர்ந்த காற்று இதமாக வீசியது. இதனால் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் இல்லை.  மேலும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை 

பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியது. இந்நிலையில்  கடந்த 3 நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழையின் வேகம் சற்று குறைந்தது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை குற்றாலத்தில் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் 

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. இதனால் போலீஸார் குற்றாலம் மெயின் உல்லாசப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். மற்றஅருவிகளில்  குளிக்க போலீஸார் அனுமதித்தனர்.

இதனால் மற்ற அருவிகளில் பொது மக்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் உற்சாகமாக ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago