முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஜூன்.15 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு திருவிழா நடந்தது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விசாக பால் குட திருவிழாவாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வைகாசி விசாக பால்குட திருவிழா கடந்த 4 ம் தேதி சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் பால்குட திருவிழா நடந்தது. 

அதனை தொடர்ந்து நேற்று மொட்டையரசு திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் மொட்டையரசு திடலை அடைந்தனர். அங்கு மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்பு இரவு 11 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி கோயில் சேர்ந்தி சென்றடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்