எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.16 - தமிழகத்தில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலபாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு பள்ளிகளை நடத்துவோமா வேண்டாமா என்ற சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
தமிழக அரசின் சமச்சீர்கல்விக்கு பெயரளவில் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இருக்ககூடிய கல்வியின் தரத்தை குறைக்க கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இந்த கல்வி கொள்கையில் சரியான தரம் இல்லை. மற்ற மாநிலங்களை போல நமது கல்வி கொள்கை சிறந்ததாக அமைய வேண்டும். கல்வியின் தரம் தொலை நோக்கு பார்வை கொண்டதாக அமைய வேண்டும். தற்பொழுது உள்ள கல்வி திட்டம் போதுமான தரமானதாக இல்லை. நமது கல்வி திட்டம் தேசிய அளவில் முதன்மையானதாகவும், உலக அளவில் சிறந்ததாகவும் அமைய வேண்டும்.
தமிழக வரலாற்றில் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு சென்ற அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைதான் காரணம்.
தனியார் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து வருகிறோம். ஆனால், சென்ற தமிழக அரசு தவறான கல்வி கட்டண கொள்கையினை அமல்படுத்தி எங்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டது. அதனால், அரசின் இக்கொள்கையினை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், சென்ற அரசு உடனே இடைக்காலத்தடை பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி நீதிஅரசர் ரவிராஜபாண்டியன் ஏப்ரல் 30, 2011-க்குள் அல்லது விரைவில் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், நேற்று 14-ம் தேதிதான் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. நீதி அரசர் கோவிந்தராஜன் கொடுத்த கல்வி கட்டணத்தை விட பெரும்பாலன பள்ளிகளுக்கு கட்டணத்தை குறைத்துள்ளார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மிகவும் கட்டணம் மோசமான நிலையில் உள்ளது. பொதுவாக இந்த கட்டணத்தை வைத்து பள்ளிகள் நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆசிரியர்கட்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய இன்கிரிமெண்ட் கொடுக்க முடியவில்லை. விலைவாசி ஏற்றம், லோன் பெற்ற பள்ளிகட்கு அதில் செலுத்தப்படும் வட்டி, நல்ல உள் கட்டமைப்பு வசதி போன்றவற்றை கணக்கில் கொள்ளப்படவில்லை.
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு இதில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை உருவாக்கவேண்டும். தேர்தலின் பொழுது ஜெயலலிதா முத்தரப்பு கமிட்டி அமைப்பதாக கூறினார். இந்த முத்தரப்பு கமிட்டியை அமைத்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தரமான கல்வி சி.பி.எஸ்.இ-க்கு இணையானதாகவும், உலகிலேயே தமிழ்நாட்டில் உள்ள கல்வி மிகவும் சிறந்தவையாகவும், அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வியாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கல்வி கட்டணத்திலும் தலையிட்டு நியாயமான தீர்ப்பினை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் அனைத்து பள்ளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வெங்கடாசலபாண்டியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.