முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிகமானந்தா சாமியார் சாவு: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

டேராடூன், ஜூன் 16 - 73 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சாமியார் நிகமானந்தாவின் மர்ம சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. கங்கையை சுத்தப்படுத்த வலியுறுத்தி சாமியார் நிகமானந்தா கடந்த 73 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்துவிட்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை நிராகரித்துள்ள காங்கிரஸ் கட்சி, சாமியார் நிகமானந்தா மர்ம சாவு குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

உத்தரகாண்ட் அரசு கங்கையை சுத்தமாக்க தவறியது மட்டுமல்லாமல், சாமியார் நிகமானந்தாவின் உயிரையும் பாதுகாக்க தவறிவிட்டது. அவருக்கு முறையான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் யஷ்பால் ஆர்யா கூறியுள்ளார். உத்தரகாண்ட் அரசு மீது நம்பிக்கையில்லை. எனவே அம்மாநில அரசின்கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணை நியாயமானதாக இருக்காது. எனவே நிகமானந்தா சாமியார் மர்ம சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பதையே காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. கங்கையை சுத்தப்படுத்தும் பிரச்சார திட்டத்திற்கு விளம்பர தூதுவராக பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினியை உத்தரகாண்ட் பா.ஜ.க. அரசு நியமித்துள்ளது.  ஆனால் கடந்த 73 நாட்களாக இப்பிரச்சனை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த சாமியார் நிகமானந்தாவின் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும்  அவர் குற்றம் சாட்டினார்.  

சாமியார் நிகமானந்தா மர்மச் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சாமியாரின் தந்தை சுபாஷ் சந்திரஜா, தாத்தா சூர்ய நாராயண் ஜா, பாட்டி ஜெய்காளி தேவி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்