முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியர்கள் 14 பேரை சீன போலீசார் கைது செய்தனர்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

சென்யாங், ஜுன் 17 - சீனாவின் வடகிழக்கு எல்லையில் 14 வடகொரியர்களை சீனா கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து ஏராளமான வட கொரியர்கள் அரசுக்கு தெரியாமல் அண்டை நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். இந்த சம்பவங்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. வடகொரியாவில் அரசியல் அடக்கு முறையின் காரணமாக அந்நாட்டு மக்கள் இதுபோன்று வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. இப்படி தப்பிவந்த வடகொரியர்கள் ஆயிரக்கணக்கில் சீனாவில் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் நுழைந்துதான் இவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியும். எனவேதான் இவர்கள் சீனாவுக்கு அதிக அளவில் வருகின்றனர். பிறகு இவர்கள் சீனாவில் இருந்து தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். அதன் பிறகு இவர்கள் தென்கொரியாவுக்குள் நுழைந்து அங்கேயே தங்கிவிடுகின்றனர். இப்படி சீனாவுக்குள் நுழையும் வடகொரியர்களை சீன போலீசார் துருவித்துருவி சோதனை நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் வடகொரியர்கள் 14 பேரை கடந்த மாதம் சீன போலீசார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்