தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி. ஜூன்.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக வரும் 19ந்தேதி (ஞாயிறு) திருச்சி வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா 3வது முறையாக முதலமைச்சரானார். அன்று மாலையில் சென்னை கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா அங்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு அரை பவுன் தங்கம் இலவசம், பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்றிட உத்தரவிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒன்றை உருவாக்கி அதற்காக ஒரு அமைச்சரையும் நியமித்தார்.
சமீபத்தில் நடந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் கவர்னர் பர்னாலா உரையில் ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை, மின்தட்டுப்பாடு, மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 பக்க கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.
இந்நிலையில் அரசு விழா மற்றும் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 19ந்தேதி பிற்பகல் ஜெயலலிதா திருச்சிக்கு தனி விமானம் மூலம் வருகிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர் திருவரங்கம் தொகுதியில் 19ந்தேதி மாலையில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இரண்டாவது நாளான 20ந்தேதி(திங்கள்) அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு தனது நன்றியினை தெரிவிக்க உள்ளார். அதன்பின்னர் 21ந்தேதி(செவ்வாய்) மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 21ந்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா சென்னை செல்கிறார்.
வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக திருச்சியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா வருவதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவரங்கம் தொகுதியில் ஜெயலலிதா கிராமம், கிராமமாக சென்றதைபோல் இப்போது நன்றி சொல்லவும் கிராமம் கிராமமாக செல்ல உள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திருச்சி அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் நகரில் நடைபெற உள்ள அரசு விழா இடத்தை பார்வையிடுவதற்காக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏவுமான ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி.குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் மஹாலி, திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, திருச்சி போலீஸ் டி.ஐ.ஜி அமல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.nullனாட்சி, சந்திரசேகர், டாக்டர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள், திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, திருச்சி ஆர்.டி.ஓ.டாக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் அரசு விழா நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக சென்றனர். ஸ்ரீரங்கத்தில் உள்ள தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலவாசல் பகுதி, மேலூர் செல்லும் சாலை ஆகிய இடங்களை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
விழாவில் கலந்து கொள்ளக்கூடிய பயனாளிகள், பொதுமக்கள், ஆகியோர்கள் சிரமமின்றி உட்கார்ந்து விழா நிகழ்ச்சியை காணும் வகையில் இடம் தேர்வு நடந்தது. இறுதியில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அரசு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் உடனடியாக துவங்கப்பட்டது.
அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ பரஞ்சோதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் பெஸ்ட் பாபு, பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுப்பையா, இலக்கிய அணி தலைவர் கொய்யாத்தோப்பு செல்வராஜ், வரகனேரி சரவணன், கே.கே.நகர் வினோத், மாவட்ட ஆணழகன் கே.கே.நகர் கார்த்திகேயன், கேபிள் தினகரன், வீரங்கநல்லூர் வீரமணி, என்ஜினீயர் பரமசிவம், என்ஜீனீயர் முருகானந்தம், கேபிள் சேகர், அஸ்ரப் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் போலீசார் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் புதியதாக குடியேறியவர்கள், வெளியூர்காரர்கள், வீட்டினுள் தங்கி உள்ளார்களா? என்பதை அறிய குடும்ப அட்டையை வாங்கி சரிபார்த்தனர். ஸ்ரீரங்கம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல அரசு விழாவில் கலந்து கொள்ள 19ந்தேதி மாலை ஸ்ரீரங்கம் நகருக்கு வருகை தர உள்ள முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் புதிய பொழிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை உள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு
24 May 2022சென்னை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிக்கவிருக்கிற
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 May 2022ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை
24 May 2022சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 பார்லி. தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு : நாடு தழுவிய பேரணி நடத்தவும் திட்டம்
24 May 2022புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா
-
மக்கள் அச்சப்பட தேவையில்லை: குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிர கண்காணிப்பு : அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
24 May 2022கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கோரியதாக புகார்: பஞ்சாப் சுகாதார அமைச்சர் டிஸ்மிஸ் : முதல்வர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு
24 May 2022சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவு: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
-
சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள்: கொலைநகராக மாறும் தலைநகர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
24 May 2022கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று க
-
சர்வதேச யோகா தினத்தில் மைசூரில் 21-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
24 May 2022புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் : பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
24 May 2022புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
-
டி.ராஜேந்தர் நல்ல நிலையில் உள்ளார் : மருத்துவமனை டாக்டர்கள் தகவல்
24 May 2022சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் டி.ராஜேந்தர் நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
-
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல்பாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராட்டு
24 May 2022டோக்கியோ : கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு
24 May 2022கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.