எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. ஜூன்.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக வரும் 19ந்தேதி (ஞாயிறு) திருச்சி வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா 3வது முறையாக முதலமைச்சரானார். அன்று மாலையில் சென்னை கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா அங்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு அரை பவுன் தங்கம் இலவசம், பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்றிட உத்தரவிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒன்றை உருவாக்கி அதற்காக ஒரு அமைச்சரையும் நியமித்தார்.
சமீபத்தில் நடந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் கவர்னர் பர்னாலா உரையில் ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை, மின்தட்டுப்பாடு, மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 பக்க கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.
இந்நிலையில் அரசு விழா மற்றும் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 19ந்தேதி பிற்பகல் ஜெயலலிதா திருச்சிக்கு தனி விமானம் மூலம் வருகிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர் திருவரங்கம் தொகுதியில் 19ந்தேதி மாலையில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இரண்டாவது நாளான 20ந்தேதி(திங்கள்) அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு தனது நன்றியினை தெரிவிக்க உள்ளார். அதன்பின்னர் 21ந்தேதி(செவ்வாய்) மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 21ந்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா சென்னை செல்கிறார்.
வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக திருச்சியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா வருவதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவரங்கம் தொகுதியில் ஜெயலலிதா கிராமம், கிராமமாக சென்றதைபோல் இப்போது நன்றி சொல்லவும் கிராமம் கிராமமாக செல்ல உள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திருச்சி அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் நகரில் நடைபெற உள்ள அரசு விழா இடத்தை பார்வையிடுவதற்காக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏவுமான ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி.குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் மஹாலி, திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, திருச்சி போலீஸ் டி.ஐ.ஜி அமல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.nullனாட்சி, சந்திரசேகர், டாக்டர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள், திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, திருச்சி ஆர்.டி.ஓ.டாக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் அரசு விழா நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக சென்றனர். ஸ்ரீரங்கத்தில் உள்ள தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலவாசல் பகுதி, மேலூர் செல்லும் சாலை ஆகிய இடங்களை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
விழாவில் கலந்து கொள்ளக்கூடிய பயனாளிகள், பொதுமக்கள், ஆகியோர்கள் சிரமமின்றி உட்கார்ந்து விழா நிகழ்ச்சியை காணும் வகையில் இடம் தேர்வு நடந்தது. இறுதியில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அரசு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் உடனடியாக துவங்கப்பட்டது.
அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ பரஞ்சோதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் பெஸ்ட் பாபு, பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுப்பையா, இலக்கிய அணி தலைவர் கொய்யாத்தோப்பு செல்வராஜ், வரகனேரி சரவணன், கே.கே.நகர் வினோத், மாவட்ட ஆணழகன் கே.கே.நகர் கார்த்திகேயன், கேபிள் தினகரன், வீரங்கநல்லூர் வீரமணி, என்ஜினீயர் பரமசிவம், என்ஜீனீயர் முருகானந்தம், கேபிள் சேகர், அஸ்ரப் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் போலீசார் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் புதியதாக குடியேறியவர்கள், வெளியூர்காரர்கள், வீட்டினுள் தங்கி உள்ளார்களா? என்பதை அறிய குடும்ப அட்டையை வாங்கி சரிபார்த்தனர். ஸ்ரீரங்கம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல அரசு விழாவில் கலந்து கொள்ள 19ந்தேதி மாலை ஸ்ரீரங்கம் நகருக்கு வருகை தர உள்ள முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் புதிய பொழிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.