எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல்,ஜூன்.17 - நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறைகளின் பணி ஆய்வு கூட்டம் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் பி. தங்கமணி தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் தனபால், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார். அதனடிப்படையில்தான் அனைத்து அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக வருவாய் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, விபத்து நிவாரணம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள், இயற்கை மரணம், விதவை உதவித் தொகை போன்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சராசரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிற மனுநீதி நாள் முகாமில் 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் புதிய தீர்வினை மனுதாரருக்கு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 65 ஆயிரத்து 311 பேர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் எவ்வித குறைபாடுமின்றி தரமான அரிசியை நியாய விலைக் கடைகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டாலோ, அல்லது அரிசி கடத்தல் நடந்தாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து பகுதிநேர கடைகள் உருவாக்கவும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் சுலபமான முறையில் மக்கள் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல சொந்தக் கட்டிடத்தில் இயங்காத நியாய விலைக் கடைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நியாய விலைக் கடைகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவித்தபடி குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தால் ரூ. 5 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும். பட்டா மாறுதல் கேட்டு கிராம அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்தாலே போதுமானது. சட்டம் ஒழுங்கை காப்பதில் காவல் துறை உரிய முயற்சியை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
முதல்வர் அறிவித்தபடி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கப்படுவதுடன் அதன் பயன்பாடு குறித்து அவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்ல வேண்டும். பொது மருத்துவத் துறை மற்றும் சுகாதார துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டிட வசதிகள், நவீன சிகிச்சைக்கான கருவிகள் ஆகியவற்றை வழங்கவும், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் தற்போதுள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும்.
கிராமங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் கலந்து பேசி குடிநீர் வழங்கும் பணியை முறைப்படுத்திட வேண்டும். பிற்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், உரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் ஆகியவற்றை அமைத்திட வேண்டும். இது போன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியுள்ள நபர்களுக்கு கிடைத்திட அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.