முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டையில் வாலிபர் குத்திக் கொலை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

அருப்புக் கோட்டை, ஜூன். 18 - அருப்புக் கோட்டையில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் குத்திக் கொ லை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம மனிதர்களை போலீ சார் வலை வீசித் தேடி வருகின்றனர். இது பற்றிய விபரம் வருமாறு - 

அருப்புக் கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந் திரன். இவரது மகன் அழகு ராஜா (வயது 21). இவர் கூலித் தொழிலா ளியாக இருந்து வந்தார். 

அழகு ராஜா நேற்று இரவு 7 மணியளவில் புளியம்பட்டி காந்தி மை தானம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ராஜாவை நெருங்கி சுற்றி வளைத் தனர். 

பின்பு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவை சரமாரியாகக் குத்தினர். இதனால் ராஜா அலறித் துடித்தார். கத்தியால் குத்திய நபர்கள் உடனடியாக இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி விட்ட னர். 

கத்திக் குத்தால் படுகாயமடைந்த ராஜா சிறிது நேரத்தில் சம்பவ இடத் திலேயே மரணமடைந்தார். அந்த வழியாக சென்ற சிலர் இந்த சம்பவ ம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

இது குறித்த தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அழகு ராஜாவின் உடலைக் கைப்பற்றினர். பின்பு அவரது உட லை பிரேத பரிசோதனைக்கு அருப்புக் கோட்டை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்தக் கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலையால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். 

இந்தக் கொலை தொடர்பாக போலீசாரிடம் கேட்ட போது, முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என்று சந் தேகிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் விசாரணைக்குப் பின் முழு விபரமும் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்