முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.18 - மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து தாய், மகனை தாக்கி 70 பவுன் நகையை கொள்ளையடித்த  3பேர் போலீசில் சிக்கினர். மதுரை வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி சங்கரேஸ்வரி.(50) மகன் தெய்வக்குமார்(14) நேற்று காலை 8 மணிக்கு 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் இவர்களது வீட்டுக்கு வந்தது. அதில் 2 பேர் வீட்டின் முன்பு நின்று கொண்டனர். 2 பேர் வீட்டுக்குள் சென்று சங்கரேஸ்வரியை கத்தி முனையில் மிரட்டி நகை இருக்கும் இடத்தை கூறச்செய்தனர். அவர் மறுக்கவே கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை அள்ள முயன்றனர். அவரது மகன் தெய்வக்குமாரும் கொள்ளையர்களை தடுத்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கத்தியால் தாய், மகனை குத்தினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதை பார்த்த கொள்ளையர்கள் நகையுடன் ஓட்டம் பிடித்தனர். இதில் ராஜேஷ் என்பவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். இது குறித்து அவனியாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேசை பிடித்து விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டை மேடை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இவன் எம்பிஏ பட்டதாரி ஆவான்.

    அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் தப்பி ஓடியவர்களை பிடிக்க அனைத்து போலீஸ் நிலையத்திற்கும், சோதனைசாவடிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதில் கொள்ளையர்கள் முத்துராமலிங்கம், தினகரன் ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 40 பவுன் நகை மீட்கப்பட்டது. தப்பி ஓடியவன் சிக்கினால்தான் மீதி 30 பவுன் நகையை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். வில்லாபுரம் குடியிருப்பு மதுரை நகருக்குள் இருக்கும் ஒரு பகுதியாகும். ஆனால் இந்த பகுதி புறநகர் மாவட்டமான அவனியாபுரம் போலீல் நிலையத்தில் உள்ளது. இதனால் போலீசார் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. மேலும் இந்த குடியிருப்புக்குள் போலீசார் வருவதே இல்லை. புறக்காவல் நிலையம் எப்போதுமே  பூட்டப்பட்டுதான் கிடக்கும். இந்த பகுதியில் கடந்த 6 மாத காலங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் திருடப்பட்டு உள்ளது. ஆளில்லாத வீடுகளை உடைத்து கொள்ளையடிப்பது அன்றாடம் நடக்கும் ஒரு சம்பவம். மேலும் பட்டப்பகலில் கூட ஆண்கள், பெண்கள் தெருக்களில் தனியாக நடமாட முடியாது. கத்தியை காட்டி மிரட்டி பணம், நகையை கொள்ளையடிப்பது என மொத்த  சமூக விரோத செயல்களும் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடந்து வருகிறது. இந்த பகுதியை அருகில் இருக்கும் ஜெய்கிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் இணைத்தால் குற்றங்கள் குறையும் என அந்த பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago