முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரி பதவி ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி,ஜூன்.19 - திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக எல்.வி. சுப்ரமண்யம் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இணை நிர்வாக அதிகாரி கே.எஸ். ஸ்ரீநிவாச ராஜூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உலகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்காடசலபதி கோயில் நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணராவ் இருந்தார். இவர் தற்போது ஆந்திர மாநில நிதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் நிர்வாக அதிகாரியாக சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி திருப்பதி கோயில் கருவறை முன்பு நேற்று எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது இதில் நிர்வாக அதிகாரியாக சுப்ரமண்யம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கோயில் இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றுள்ள சுப்ரமண்யம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் ஆண்டு வருமானம் ரூ. ஆயிரத்து 600 கோடியாகும். வருடந்தோறும் வருமானம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்