முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோயிலில் அ.தி.மு.க.வினர் தங்கரதம் இழுத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

பழனி,பிப்.27 - பழனி முருகன் மலைக் கோயிலில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் தங்கரதம் இழுத்தனர். பழனி முருகன் மலைக் கோயிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் அர்ச்சனை செய்தும், ரதம் இழுத்தும் வழிபாடு நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் செல்லச்சாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி, முன்னாள் கோயில் தக்கார் வேணுகோபாலு, மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன், ஒட்டன்சத்திரம் ஜெ. பேரவை பாலசுப்பிரமணியம், சிறுபான்மை பிரிவு பசீர் அகமது, நகர செயலாளர் பரதன் மற்றும் மகுடீஸ்வரன் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. குமாரசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் பரதன், மாவட்ட மாணவரணி அன்வர்தீன், விவசாய அணி செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பழனி பஸ் நிலையம் அருகே நகர இளைஞர் பாசறை சார்பில் 63 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வெட்டப்பட்டது. இதில் அ.தி.மு.க. அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்