எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, ஜூன்.- 20 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்று அரசு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்த நல்லூர் மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நன்றி தெரிவிப்பதற்காகவும் மூன்று நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10.25 மணிக்கு வந்தடைந்தார். தனி விமானம் மூலம் வந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா வந்தார். திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி மாநகராட்சி மேயர் எஸ்.சுஜாதா, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.மாகாலி, திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, டி.ஐ.ஜி அமல்ராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே.மீனா, திருச்சி மாநகராட்சி ஆணையர் தி.த.பால்சாமி ஆகியோர் வரவேற்று பூச்செண்டு கொடுத்தனர்.
வரவேற்புக்கு பின்பு காரில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த முதல்வர் ஜெயலலதாவை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி, வைத்தியலிங்கம், கே.வி.ராமலிங்கம், திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி. குமார், முன்னாள் அமைச்சர்கள் கே.கே.பாலசுப்பிரமணியன், குப.கிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் பூனாட்சி, இந்திராகாந்தி, ஸ்ரீரங்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலை 7 மணி முதல் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர் ஜெயலலிதா காரில் இருந்தபடியே அனைவரையும் பார்த்து கையசைத்து கொண்டே புறப்பட்டார். முதல்வரை பார்த்த உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் பதிலுக்கு கையசைத்தனர்.
தொடர்ந்து காரில் வந்த ஜெயலலிதாவை விமான நிலையத்தில் இருந்து திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் வரை இருபுறங்களிலும் திறண்டு இருந்த அதிமுகவினர் கைகளில் கொடிகளை ஏந்தி வரவேற்றனர். வழிநெடுகிலும் முதல்வரை வரவேற்கும் வகையில் வகையில் ஒயிலாட்டம், மயிலாட்டம், கேரளா ஜெண்டா மேளம், பறை மேளம் கொட்டி தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து குட்ஷெட் மேம்பாலம் வழியாக தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, கண்டோன்மெண்ட், எம்.ஜி.ஆர்.சிலை, புத்தூர் நால்ரோடு, தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர், கரூர் பைபாஸ் பாலம், சத்திரம் பஸ் நிலையம், காவிரி பாலம், திருவானைக்காவல் மாம்பழச்சாலை வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் வரலாறு காணாத வகையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஏறத்தாழ விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவுக்கு ஸ்ரீரங்கம் வரை முதல்வர் ஜெயலலிதாவை வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் நின்று வரவேற்றனர். அதேபோல ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் காரில் ஏறி ஸ்ரீரங்கத்தில் இருந்து சங்கம் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அப்போதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தார். மாலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் வரை ஏர்போர்ட் பகுதி அதிமுக செயலாளர் வெல்லமண்டி சண்முகம், பகுதி அவைத்தலைவர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி ஆகியோர்களது தலைமையில் இரண்டு கி.மீ.தூரத்துக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தீரன் முகமது இக்பால், டாக்டர் வேலுசந்தர், திருச்சி மாவட்ட ஆணழகன், கே.கே.நகர் பி.கார்த்திகேயன் ஆகியோரும் வரவேற்றனர். ஸ்ரீரங்கத்தில் பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், ஸ்ரீரங்கம் பகுதி கழக பிரதிநிதி முருகேசன் ஆகியோர்களது தலைமையில் சீருடையுடன் மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல மாவட்ட மீனவரணி செயலாளர் பேரூர் கண்ணதாசன் தலைமையில் மீனவர்களும், மாவட்ட இளக்கிய அணி தலைவர் கொய்யத்தோப்பு செல்வராஜ் தலைமையிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.