முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பேட்டரி கார்களை வழங்கிய முதல்வரின் கருணை உள்ளம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஜூன்.- 20 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகவும் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் நேற்று காலை திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து கார் மூலம் திருவரங்கம் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ரெங்கநாதரை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். அப்போது திருவரங்கம் கோவிலுக்கு வரும் வயதான பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரெங்கநாதரை தரிசனம் செய்வதற்காக பேட்டரியால் ஆன 2 கார்களை கோவிலுக்கு வழங்கினார் அதற்கான சாவிகளை கோவில் நிர்வாகத்திடம் முதல்வர் வழங்கினார். பின்னர் அந்த பேட்டரி காரில் ஏறி அதன் சேவையை துவக்கி வைத்தார். காரின் பின்னால் முதல்வரின் தோழி சசிகலா அமந்து இருவரும் சிறிது தூரம் பயணம் செய்தனர்.  இதில் ஒருகார் இந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்பட்டது. மற்றொன்று ஜெயலலிதாவின் சொந்த செலவில் வழங்கப்பட்டது. இந்த பேட்டரி கார்களில்  ஒரு காரில் 6 பேரும், மற்றொரு காரில் 12 பேரும் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக மேடை ஏறும் அரசு விழா

திருச்சி திருவரங்கம் மேலச்சித்திரவீதியில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ரூ.306 கோடி மதிப்பிலான 38 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சுமார் 430 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 

இதற்கு முன்பு சென்னையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மிகவும் எளிமையாக தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா முதல்முறையாக மேடையில் பங்கேற்கும் அரசு விழா திருவரங்கத்தில் பங்கேற்ற இந்த அரசு விழாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் ஜெயலலிதா தான் முதல் அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே கட்சியினருக்கு ஆடம்பரங்களை செயல்படுத்தக்கூடாது என்று தடைவிதித்தார். இலவச அரிசி வழங்கும் விழாவும் மிகவும் எளிமையாகதான் முடிந்தது. அந்த வகையில் திருச்சியிலும் பிரமாண்டமான அலங்கார வளைவுகளோ, பிளக்ஸ் தட்டிகளோ அமைக்கப்பட்டவில்லை. ஓரிரு இடங்களில் சிறிய அளவில் விளம்பர போர்டுகளே வைத்துள்ளனர். கட்சிக்கொடி தோரணங்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்