முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவை ரங்கசாமி சந்திப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது-மா.கம்யூ

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.- 20 - சோனியாவை ரங்கசாமி சந்திப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்மாநில குழு உறுப்பினர் குணசேகரன், பிரதேச செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், முருகன், ராமச்சந்திரன், கலிவரதன் உலகநாதன் உள்பட பிரதேச குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற ரங்கசாமி காங்கிரஸ் தலைவி சோனியாவை சந்திப்பது என்பது மாநில மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோனியா-ரங்கசாமி சந்திப்பு என்பது தோற்ற காங்கிரசோடு மறைமுக கூட்டாகவே மக்கள் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இது தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாடாகும். மக்கள் தந்த தீர்ப்புக்கு எதிரான இந்த நிலைப்பாட்டை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கிணங்க ரங்கசாமி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். முழுமையான அமைச்சரவையை ஏற்படுத்தி இலாகாக்களை ஒதுக்கீடு செய்து தேர்தலில் தந்த வாக்குறுதிகளையு, அரசு திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும். 

மேலும் சட்டமன்றம் கூட்டப்படாமல் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாமல் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க முயல்வது சரியான நெறிமுறை அல்ல என்பதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்துகிறது. 

நெல் உற்பத்தியை பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் உடனடிக் கடமையாகும். புதுவை மாநிலத்திற்கு ரேசன் அரிசிக்கு தேவையான நெல்லை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசின் நிர்ணய விலையை விட கூடுதலாக விவசாயிகளுக்கு விலை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்