முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-மே.இ.தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கிங்ஸ்டன், ஜூன். - 20  - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில் இன்று துவங் க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாக உள்ளனர். கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி மேற்கு இந் தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. மே.இ.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டி - 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி நடத்த திட்ட மிடப்பட்டது. இதில் முதலில் நடந்த டி - 20 யில் இந்தியா வென்றது.

பின்பு நடந்த 5 ஒரு நாள் போட்டித் தொடரில் 3 - 2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொ  ண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. 

இந்திய அணியின் மூத்த வீரர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் டி - 20 மற்றும் ஒரு நாள் தொடரில் அவர்களுக்கு வாரியம் ஓய்வு அளித்தது. இதனால் இந்தத் தொடரில் ரெய்னா இளம் வீரர்களைக் கொண்ட இந் திய அணிக்கு தலைமை தாங்கினார். 

மூத்த வீரர்களான டெண்டுல்கர், கேப்டன் தோனி, சேவாக், காம்பீர் , ஜாஹிர்கான் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் முதல் இரண்டு தொட ர்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க்கில் இன்று இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. 

முதல் டெஸ்டில் கேப்டன் தோனி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லக்ஷ் மண், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் முரளி விஜய் ,அபினவ் முகுந்தும் பங்கேற்பார் என்று தெரிய வருகிறது. 

ஆனால் நட்சத்திர வீரர் டெண்டுல்கர், சேவாக், காம்பீர் மற்றும் ஜா ஹிர்கான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. துவக்க வீரர் விஜய் பயிற்சியின் போது காயம் அடைந்தார். முனாப் படேல் ஒரு நாள் போட்டியின் போது காயம் கடைந்தார். 

இதனால் இருவரும் முதல் டெஸ்டில் பங்கேற்பது கேள்விக் குறியாகி யுள்ளது. இருவரும் அல்லது ஒருவர் கலந்து கொள்ளாமல் போனால் அது இந்திய அணிக்கு பின்னடைவாகும். 

ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இந்த டெஸ்டில் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததால் மே.இ.தீவு அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கை யில் உள்ளது. இதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. 

மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ் ட் போட்டி கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க்கில் இன்று இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்