முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் அறக்கட்டளைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 21 - டெல்லியில் கடந்த 4-ம் தேதி நள்ளிரவு யோகா குரு ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டது குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு  ராம் தேவால் நடத்தப்படும் பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடந்த  4-ம் தேதியன்று  டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில்  பிரபல யோகா குரு ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் சத்யாகிரக போராட்டத்தை நடத்தினர்.
அன்று நள்ளிரவு ராம் தேவும் அவரது ஆதரவாளர்களும் டெல்லி போலீசாரால் அங்கிருந்து  வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்.  அப்போது ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இது தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு  செய்திகளாக வெளிவந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து சுப்ரீம் கோர்ட்டே  தானாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு  செய்தது.
ராம்தேவ் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி  தலைமை செயலாளர் , டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசிற்கு பதில் அளித்த டெல்லி போலீஸ்  தாங்கள் ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி பிரயோகம்  செய்யவில்லை என்றும் 8 கண்ணீர் புகை குண்டுகளைத்தான்  வீசினோம் என்று கூறியுள்ளனர்.
இதற்கு  பா.ஜ.க. உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
டெல்லி போலீசாரின் பதில் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் பி. சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால டிவிஷன் பெஞ்ச் நேற்று ஆய்வு செய்தது. அப்போது டெல்லி போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல் யு.யு.லலித், இந்த சம்பவத்தில் ராம்தேவ் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ராம்தேவ் தரப்பிலும் அவர்களது நிலை குறித்த விவரங்களை சொல்ல அனுமதிக்கலாம் என்று கேட்டுக்கொண்டார்.
இதை அடுத்து  இந்த சம்பவம் தொடர்பாக ராம்தேவ் தரப்பு நிலையை அறிந்து கொள்ள ராம்தேவால் நடத்தப்பட்டு வரும் பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளையின் டெல்லி  கிளை தலைவர்  ஆச்சார்ய வீரேந்திர விக்ரம் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை அடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை மாதம் 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago