முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஜூன்.- 21 - திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் விடிய விடிய நடந்தது.  திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 16 நாட்கள் பெரிய ரத வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தினமும் இரவு 9 மணிக்கு மவுலூது ஓதப்பட்டது. சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பெரிய ரத வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் சந்தன செம்பு வைத்து விடிய விடிய பாத்தியா ஓதப்பட்டது.
அதிகாலை 3 மணிக்கு சந்தனக்கூடு வண்டி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளில் வலம் சென்று மலையடிவாரத்தில் நிறுத்தப்பட்டது. வண்டியில் இருந்த சந்தன செம்பு மலை மீதுள்ள தர்ஹாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் சீனியர் எஸ். பாஷாகான், ஒய். அமீர்ஜான், என். மகபூப்கான், கே. இப்ராகிம்கான், ஏ. ஜான்பாஷா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்