எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - ரூ.250 கோடி செலவில் சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப்பணிகள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்திய அரசின் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியால் சென்னை வர்த்தக மையம் 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் 51 சதவீதமும் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் 49 சதவீதமும் பங்களிப்பு செய்து இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தகம் மற்றும்
தொழில்துறை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில், தொழில் கண்காட்சிகளை நடத்தி அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
சென்னை வர்த்தக மையம், சென்னை மாநகரின் பிரதான இடமான
நந்தம்பாக்கத்தில், 25.48 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இவ்வர்த்தக மையம், 10560 சதுரடியில் மூன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கண்காட்சி அரங்கங்களையும், ரூபாய் 60 கோடியே 60 இலட்சம் செலவில், 2000 பேர் அமரக் கூடிய கூட்டரங்கையும் உள்ளடக்கியது. சென்னை வர்த்தக மையத்தில், 2001ஆம் ஆண்டில் ஒரு கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக 84 கண்காட்சிகளையும், 107 கூட்டங்களையும் நடத்துமளவிற்கு தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இப்போதுள்ள வர்த்தக மையத்தின் பரப்பளவு, நாட்டிலுள்ள பிற வர்த்தக மையங்களின் பரப்பளவைவிட குறைவாக உள்ளதால், உலகளாவிய மிகப் பெரிய
வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிகளை சென்னையில் நடத்த போதிய இடவசதியில்லை.
சென்னை வர்த்தக மைய விரிவாக்கத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2010 மே 3 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது சென்னை வர்த்தக மைய விரிவாக்க திட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்
வகையில், சென்னை வர்த்தக மையம் உலகத்தரத்தில் விரிவாக்கப்படவுள்ளது. மேற்படி விரிவாக்கப் பணிக்கு, டாமாசிக் இன்ஜினியரிங் கன்சார்டியம் நிறுவனம் சென்னை, கட்டுமானப் பொறியியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், பல அடுக்கு கண்காட்சி
அரங்குகள் மற்றும் இரண்டு அடுக்கு அடித்தளங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
மேற்படி விரிவாக்கத்தின் மூலம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் தலா 6 குளிர்சாதனப் வசதிக் கொண்ட கண்காட்சி அரங்குகள் ஒவ்வொன்றும் 66000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளன. அடித்தளத்தில் 74000 சதுரடி பரப்பளவில், 2000 கார்களும், 2000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு
கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரிவாக்கத்தில், உணவுக்கூடம், நூலகம், கூட்டரங்கம், பேரழிவு மேலாண்மை முறை மற்றும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இவ்விரிவாக்கத் திட்டம் ஜூலை 2011ல் தொடங்கப்பட்டு, மார்ச் 2013ல் முடிவடையும். இவ்விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றப்பின்,
நாட்டிலேயே சிறந்த தொழிற்கண்காட்சி வளாகமாக சென்னை வர்த்தக மையம் அமையும்.
சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டத்தினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.2.2011) தொடங்கி வைத்து, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவர் தேவேந்திரநாத் சாராங்கி, மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால், தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.