முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய சதுரங்கப்போட்டிக்கு டால்பின் பள்ளி மாணவர் தகுதி

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 21 - ராஜபாளையத்தில் நடந்த மாநில சதுரங்கப்போட்டியில் வென்ற மதுரை டால்பின் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தமிழநாடு மாநில சதுரங்க கழகம், விருதுநகர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் ராஜபாளையத்தில் கடந்த 13-ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை 17 வயது பிரிவினருக்கான மாநில சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் மதுரை டால்பின் மெட்ரிக்பள்ளி பிளஸ் -1 மாணவர் மணிகண்டன்,  6 -ம் வகுப்பு மாணவர் அரவிந்த்சிதம்ரபரம் ஆகியோர்  பங்கேற்றனர். மணிகண்டன் 9 சுற்றுகளில் ஏழரை புள்ளிகளுடன் முதலிடம் பெற்று கோப்பை வென்றார். கடந்தாண்டும் இவர் முதலிடம் பெற்றார். என்பது குறிப்பிடத்தக்கது. அரவிந்த்சிதம்பரம் 9 சுற்றுகளில் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் வென்று சாதனை படைத்தார்.  இருவரும் தேசிய சதுரகப்போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதித்த மாணவர்களையும் பயிற்சி அளித்த தலைமைப்பயிற்சியாளர் திருநாகலிங்கம், சிறப்பு பயிற்சியாளர்கள் கவுஸ்கமாருதீன் ஆகியோரை பள்ளி தாளாளர் ராமநாதன், முதல்வர் பத்மா பாராட்டினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்