முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டாள்கோவில் தெப்பக்குளம் மதுரை மீனாட்சிகோவில் தெப்பக்குளம் போல் சீரமைக்கப்படும்-ஆர்.பி.உதயகுமார்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஜூன்.- 22- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தெப்பக்குளம் தமிழக முதல்வரின் மேலான உத்தரவுபடி மதுரை மீனாட்சி கோவில் தெப்பக்குளம் போல் சீரமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று(21ந்தேதி) ஸ்ரீவில்லிக்கு வருகைதந்தார். அப்போது அவர் மிகவும் பாழ்பட்ட நிலையில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவு  உள்ள திருப்பாற் கடல் குளத்திற்கு சென்று ஆய்வு செய்து இந்த குளம் மீண்டும் புத்துயிர் பெற சகல ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடையே கூறுகையில் கோதை ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமியாம் இந்த நகரில் ஆண்டாள் நீராடி உவகை பெற்ற இந்த புனித குளம் விரைவில் புது பொலிவு பெறும் வகையில் மாற்றம் செய்ய முதல்வர் அவர்களிடம் தெரிவித்து அவரது மேலான உத்தரவுபடி சிமிண்ட் நடை பாதை அமைத்து, இருக்கைகள் அமைத்து சுற்றி மரம் நட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைத்து மதுரை தெப்பக்குளம் போல சீரமைக்கப்பட உள்ளது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்து அதன் மேன்மை, உயர்வு குறித்து தமிழக மக்கள் உணர வேண்டும் என்பது தமிழக முதல்வரின் தலையான கொள்கையாகும். அதன்படி திருப்பாற் கடல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த திமுக ஆட்சியின் போது கிடப்பில் போடப்பட்ட பல நல்ல திட்டங்கள் நமது மாவட்டம் முழுவதும் உள்ளது. அத்தனை திட்டங்களும் முதல்வரின் உத்தரவுபடி நிறைவேற்ற பட உள்ளது. தமிழக முதல்வர் அறிவித்துள்ள மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

முன்னதாக ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் சென்று அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்து தமிழக முதல்வரின் பெயருக்கு ஆண்டாள் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வழிபட்டார்.

அமைச்சர் உதயகுமாரின் ஆய்வின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திகோதண்டம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மங்களசாமி, தொகுதி செயலாளர் சிந்துமுருகன், வழக்கறிஞர் அணி தலைவர் செளந்திரராஜன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் சேதுபாண்டி, கழக வழக்கறிஞர் அணி துணை செயலாளர்கள் திலகராஜன், சுரேஷ்நெப்போலியன், கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரிநாகராஜன், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன்,நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரன், சந்தானமூர்த்தி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பட்டி சீனிவாசன், பிள்ளையார்குளம் ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, தேரடி அருணா, உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர். 

ஆண்டாள் கோவில் வருகைதந்த அமைச்சர் உதயகுமாரை ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் ஆ.சொ.குருநாதன், எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், நகராட்சி ஆணையாளர் முத்துகண்ணு, நாச்சியார் டிரஸ்ட் செயலாளர் ரவிசந்திரன், நகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கோமதி சங்கர் குருசாமி, கோவில் தலைமை அர்ச்சகர் முத்து பட்டர், ஸ்தானீகம் ரமேஸ்பட்டர் ஆகியோர் வரவேற்று ஆண்டாள் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago