முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஆக்ரமிப்பு - அமைச்சர்-மேயரின் நெருக்கமான புள்ளிக்கு வெட்டு

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - சென்னை கோட்டூர்புரத்தில் நில ஆக்ரமிப்பு விவகாரத்தில் அமைச்சர் பருதிக்கும், மேயருக்கும் நெருக்கமான புள்ளிக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னை கோட்டூர்புரம் ஹவுசிங் போர்ட் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (35) ரியல் எஸ்டேட் அதிபர். இவர் ஆதிதிராவிடர் நலக்குழு என்ற அமைப்பின் சைதை பகுதி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அமைச்சர் பருதிக்கும், மேயருக்கும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 

இதே பகுதியில் வசித்து மறைந்த முன்னாள் ரவுடி ஜிம் ஏழுமலை என்பவனுக்கு சொந்தமாந நிலம் கோட்டூர்புரத்தில் இருந்துள்ளது. அதை தனக்கு சொந்தமாக்கி கொள்ள சண்முகம் தனது அரசியல் செல்வாக்கை வைத்து முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதை ஜிம் ஏழுமலையின் கூட்டாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லையாம். இந்த தகராறையொட்டி நேற்று மதியம் சண்முகத்தை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது. இதில் சண்முகத்திற்கு இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. சிகிச்சைக்காக சண்முகம் அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை முயற்சி சம்மந்தமாக சார்லஸ் என்பவன் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்