முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திர பிரதேசத்தில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

காஜிபூர்,பிப்.27 - உத்திரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி சென்றபோது சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 24-ம் தேதி சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காஜியாபூர் அருகே சையத்பூர்-நந்த்கஞ்ச் என்ற ஊர்களுக்கு இடையே சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுசொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர். அந்த வழியாக சென்ற மோட்டார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகவும் போலீசார் மீது தாக்கியதாகவும் தெரிகிறது. அந்த நேரத்தில் முதல்வர் மாயாவதி காரில் வந்து கொண்டியிருந்தார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவரது பயணம் தடைபட்டது. இதனையொட்டி அந்த 300 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை மாவட்ட போலீஸ் அதிகாரி மனோஜ்குமார் நேற்று காஜியாபூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்