முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊராட்சித் தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.24 - உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செயயப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். உள்ளாட்சி தலைவர்கள் பதவியை ஏலம் விடும் முறையால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மதுரையில் நடைபெற்ற கட்சியின் 6 மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் விடும் செயல்கள் நடந்துள்ளன. ஆகவே அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தலைவர்கள் செயல்படுவதற்கு  ஏல முறை எதிராக அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்